மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் 4% அகவிலைப்படி உயர்வு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஜூலையில் 4% அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஜூலையில் 4% அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் 4% அகவிலைப்படி உயர்வு?

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் குடும்பச் செலவுகளைக் கையாள பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. பணவீக்கம் உயரும்போது அகவிலைப்படியும் உயர்த்தப்பட வேண்டும். இதனால் சம்பளமும் அதிகரிக்கும். இந்நிலையில் வரும் ஜூலை மாதத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

கடந்த மார்ச் மாதம், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 3% உயர்த்தப்பட்டது. அதன்படி, ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமலாகிறது. இந்நிலையில் தற்போது ஜூலை மாதத்தில், மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி 38% ஆக உயரும். இந்த உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக உயரும். மேலும் மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) புள்ளி விவரங்களில் இருந்து, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் 2022 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான AICP குறியீட்டில் சரிவு ஏற்பட்டது. AICP குறியீட்டு எண் ஜனவரியில் 125.1 ஆக இருந்தது. அதேபோல், பிப்ரவரி மாதத்தில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் இருந்தது. ஏப்ரல் மாத விவரங்கள் இன்னும் வரவில்லை. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான விவரங்களும் வந்த பிறகு குறியீடு 126 க்கு மேல் சென்றால் அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது. அப்படி அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்தால் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில், உயர்வு இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களில் ரூ.56,900 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதம் என்ற கணக்கில் அவர்களின் அகவிலைப்படி ரூ.21,622 ஆக இருக்கும். இதன்படி அவர்களது சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூ.2,276 (ஆண்டுக்கு ரூ.27,312) அதிகரிக்கும். மேலும் 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் தற்போது ரூ.6,120 அகவிலைப்படி பெறுகின்றனர். அவர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்தால், மொத்த உயர்வு ரூ.6,840 ஆக இருக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் 720 ரூபாய் அதிகமாகக் கிடைக்கும். இதன்படி ஆண்டுக்கு ரூ.8,640 உயர்வு இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!