‘பாக்கியாவை திருமணம் செய்ததால் தான் இவ்வளவு பிரச்சனை’ – திட்டி தீர்த்த கோபி! ப்ரோமோ ரிலீஸ்!
கோபி ராதிகாவிடம் உங்களது குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வையுங்கள் என கேட்டதால் என்ன செய்யலாம் என கோபி பிளான் போட்டு கொண்டிருக்கிறார். பாக்கியாவை பார்த்ததும் இவளால் தான் இவ்வளவு பிரச்சனை என சம்மந்தமே இல்லாமல் ராதிகாவை கோபி திட்டுகிறார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி, ராதிகாவிடம் மாட்டிக்கொள்ள போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பிறந்தநாள் விழா முடிந்ததும் கோபி ராதிகாவை சந்தித்து பேசுகிறார். கோபியும், ராதிகாவும் நெருக்கமாக நின்று பேசி கொண்டிருப்பதை மூர்த்தி பார்த்து சந்தேகப்பட்டு ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். ராதிகாவிடம் உங்களது வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார். ராதிகாவும் கோபியின் புகைப்படத்தை எடுத்து நீட்ட மூர்த்தி அதிர்ச்சியடைகிறார். பின்பு, ராதிகாவிடம் மூர்த்தி இவர் நல்லவர் கிடையாது.
Exams Daily Mobile App Download
நீங்கள் மேலும் மேலும் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள். அவரது குடும்பத்தில் உள்ள யாரையாவது இதுவரை பார்த்திருக்கிறீர்களா என கேட்கிறார். நீங்கள் ஒரு முறை குடும்பத்தினரின் புகைப்படத்தை கேளுங்கள். அதை பார்த்த பின்பு எதை வேண்டுமானாலும் முடிவு செய்யுங்கள் என சொல்லிவிட்டு மூர்த்தி கிளம்புகிறார். உடனே ராதிகா, கோபி வீட்டிற்கு வந்ததுமே உங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார். ஆனால் கோபி என்னால் காட்ட முடியாது என கூறவும் ராதிகா கோவத்தில் வீட்டை விட்டு வெளியே போங்கள் என கூறி விடுகிறார்.
சன், விஜய் டிவி சீரியல்களை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்!
எப்படியாவது ராதிகாவிடம் ஏதேனும் வேறு குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தையாவது காட்டி தப்பிக்க வேண்டும் என கோபி நினைக்கிறார். ராதிகா எந்த பொய் சொன்னாலும் எளிதில் கண்டுபிடித்து விடுவார். இதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கோபி நினைக்கிறார். பின்பு, வீட்டில் பாக்கியா இருப்பதை பார்த்ததும் கோபிக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. இவளால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனை, டென்ஷன் எல்லாமே, இவளை நான் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருப்பேன் என மனதிற்குள் நினைத்து கொண்டு கோபி பாக்கியாவை கண்டபடி திட்டும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.