தமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன நிபந்தனைகள் என்பது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
அரசுப் பேருந்து:
தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒன்றாக பொதுப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயணம் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். ஏற்கனவே பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயண திட்டத்தால் போக்குவரத்து துறை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பேருந்துகள் இயக்க முழுவதும் தடை விதிக்கப்பட்டதால் மேலும் போக்குவரத்து துறை பாதிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன் பிறகு அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியது. மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பேருந்துகள் கொரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்பட்டது. தற்போது அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல 100% இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசுப் போக்குவரத்து துறை கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணையும் தனுஷ் & ஐஸ்வர்யா? இது தான் காரணம்?
நிபந்தனைகள்:
- உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும்.
- உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும்.
- உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு இடையூறு தரும் செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்.
- உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களின் விலைப் பட்டியலை பயணிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும். மேலும் எம்.ஆர்.பி. விலையில் தான் விற்கப்பட வேண்டும்.
- உணவகத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்.
- பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாக தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.