ரயில் பயணிகளுக்கு IRCTC யின் வசதிகள் – முக்கிய அறிவிப்பு!
ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக புது அறிவிப்பு ஒன்றை ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன் படி முன்பதிவு செய்தவர்கள் எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் ஏறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ரயில்வே துறை அறிவிப்பு:
ஏழை எளிய மக்கள் முதல் வசதியானவர்கள் வரை பலர் ரயில் பயணத்தை விரும்பி செல்கின்றனர். அதற்கு காரணம் ரயில் பயணம் சொகுசாகவும், குறைந்த கட்டணத்தில் விரைவாக சென்றடைவதாக இருக்கிறது. இந்நிலையில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏற்றார் போல பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வசதி ஒன்றை ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த வசதியானது ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன் படி நீங்கள் முன்பதிவு செய்த ரயில் நிலையத்தில் இல்லாமல் வேறு எந்த ரயில் நிலையத்திலும் நீங்கள் ரயிலில் ஏறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நீங்கள் ரயில்வே ஸ்டேஷனை மாற்றுவதால் அதற்காக உங்களிடம் எந்தவித அபராதமும் ரயில்வே துறை வசூலிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர்டிங் பாயிண்ட் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு IRCTC தளத்திலேயே வசதி உள்ளது. அவ்வாறு மாற்றாமல் இருந்து வேறு ஸ்டேசனில் ஏறினால்தான் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் கல்லுரியில் வேலை !
மேலும் ஒரு சில நேரங்களில் திடீரென போர்டிங் ஸ்டேசனை மாற்ற வேண்டிய நிலை வந்தால் அதாவது பயணிகள் தொலைவில் இருந்து வர முடியாமல் ரயிலை தவறவிட்டால் அதனால் பயணிகள் அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயிலில் ஏறிக் கொள்ளலாம் இந்த வசதியை IRCTC வழங்குகிறது. IRCTCயின் இந்த வசதி, பயண முகவர்கள் மூலமாகவோ அல்லது பயணிகள் முன்பதிவு முறை மூலமாகவோ அல்லது ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் போர்டிங் ஸ்டேசன் மாற்றத்தை VIKALP ஆப்சனிலும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.