IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – ரத்து செய்த டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இந்தியாவில் ரயில் பயணிகள் IRCTC டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணம் செய்ய முடியாத டிக்கெட் கட்டணங்களை திரும்ப பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நிபந்தனைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
டிக்கெட் முன்பதிவு:
இந்தியாவில் மக்கள் கொரோனா தொற்று பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் நிலையில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் முன்பதிவு அடிப்படையில் பயணிகள் பயணம் செய்ய ரயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஆன்லைன் வாயிலாக ஐஆர்சிடிசி கணக்கு தொடங்கி அதன் மூலம் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது. இதனால் ரயில் பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே டிக்கெட் புக் செய்யலாம்.
தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம் நீங்கள் சில நிமிடங்களிலேயே உங்கள் டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் ஒரே நேரத்தில் 6 டிக்கெட்டுகள் வரை புக் செய்யும் வசதியும் உள்ளது. இதற்கு நீங்கள் உங்களின் IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பது அவசியமாகும். முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளில் ஏதேனும் ஒரு காரணத்தால் உங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அதற்கான கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
ரயில்களுக்கான பயணிகளின் இறுதி பட்டியல் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு தான் தயார் செய்யப்படும். அதற்கு முன் நீங்கள் ரத்து செய்ய வேண்டும். முன்பதிவு இறுதி பட்டியல் தயாரான பிறகு இ-டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த ரத்து கட்டணங்கள் முன்பதிவு செய்யப்பட்ட தொகையில் கழிக்கப்படும். மீதம் உள்ள முன்பதிவு தொகை மட்டுமே உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். ரயில் புறப்படுவதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள் திரும்ப வழங்கப்படாது.