தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 4) உள்ளூர்
தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 4) உள்ளூர்

தமிழகத்தின் இம்மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோவில். இந்த நிலையில் வைகுண்டசாமியின் பிறந்த நாளான மாசி 20 ஆம் தேதி அதாவது மார்ச் 4ம் தேதி அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டசாமி அவதார தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

சென்னைவாசிகள் கவனத்திற்கு – குடிநீர் வாரியம் முக்கிய அறிவிப்பு!

அதன்படி இந்த ஆண்டு 189வது அவதார தின விழா நாளை மார்ச் 4ம் தேதி கொண்டாட உள்ளனர். இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாக மார்ச் 3ம் தேதியான இன்று காலை 6 மணிக்கு திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து ஆதலவிளைக்கு மகாதீப ஊர்வலம் நடக்க உள்ளது. இந்த விழா, ஊர்வலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

மேலும் இந்த உள்ளூர் விடுமுறையிலும் ஒரு சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக நிறுவனங்கள் ஆகியவற்றிக்கு விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் வங்கிகள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!