IPL 2022 திருவிழா: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – அணியின் உண்மை நிலவரம் இது தான்?
நாளை மறுநாள் (மார்ச்.26) துவங்க இருக்கும் IPL 2022 போட்டியில் களமிறங்க இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங்கின் தற்போதைய நிலை குறித்த சில விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தொடை தசை காயம் காரணமாக, ஐபிஎல் 2022 இன் பெரும் பகுதியை இழக்க இருக்கின்றார். அதே நேரத்தில் டெவோன் கான்வே, ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகிய நியூசிலாந்து வீரர்கள் மூவரும் நெதர்லாந்துக்கு எதிரான வெள்ளை-பந்து தொடருக்கான சர்வதேச போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டதினால் அவர்கள் முழு ஐபிஎல் போட்டியிலும் கலந்து கொள்வார்கள். மேலும், தென்னாப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ், பங்களாதேஷுக்கு எதிராக விளையாடி வருவதால் அவர் தொடக்க ஆட்டத்தை மட்டும் இழக்கிறார்.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு இன்றியமையாதவராக இருந்த மொயீன் அலி, ஐபிஎல் போட்டிக்கு இந்தியாவுக்கு வருவதற்கு தேவையான விசாவை சரியான நேரத்தில் பெறத் தவறியதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது சந்தேகமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மார்ச் 26ம் தேதியன்று நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சென்னை அணியின் தற்போதைய நிலை குறித்து இப்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக பேட்டிங்கை பொருத்தளவு ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் மொயீன் அலி இல்லை.
இதனால் ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் முதலிடத்தில் இருப்பார்கள். மொயீன் அலி இல்லாததால் நியூசிலாந்து வீரர் கான்வேக்கு ஐபிஎல் அறிமுகம் கிடைக்கலாம். மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அம்பதி ராயுடுவின் அதிரடியும், அனுபவமும் வழக்கம் போல சிறப்பாக இருக்கும். மும்பை ஆல்ரவுண்டரான சிவம் துபேவின் சேர்க்கை மிடில் ஆர்டருக்கு மேலும் வலுவூட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாக CSK அணியில் இடம்பிடித்திருக்கும் என் ஜெகதீசன் மற்றும் சி ஹரி நிஷாந்த் ஆகிய தமிழ்நாட்டு வீரர்கள் அல்லது ஒடிசா கேப்டன் சுப்ரான்ஷு சேனாபதிக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கலாம்.
CSK அணியின் பந்துவீச்சை பொருத்தவரைக்கும், சாஹரின் காயம் பந்துவீச்சு பகுதியை சற்று பாதித்துள்ளது. ஆனால் சூப்பர் கிங்ஸுக்கு இவரை தவிர துஷார் தேஷ்பாண்டே , முகேஷ் சவுத்ரி ஆகிய வேகப்பந்து வீச்சு விருப்பங்கள் உள்ளன. அதே நேரத்தில் கிறிஸ் ஜோர்டான் மற்றும் பிரிட்டோரியஸ் பல பரிமாண வீரர்கள் என்றாலும் பவர்பிளேயில் ஆடக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு திறமை இருக்காது என்று தெரிகிறது. இப்போது சாஹருக்கு பதிலாக ஒரு இடது கை தேர்வாக இலங்கையின் மர்ம சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா இருக்கிறார். அவர் பவர்பிளேயில் பந்து வீசுவதற்கு முன்வரலாம்.
தமிழக பல்கலைக்கழகத்தில் 1 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
நியூசிலாந்து வீரர் மில்னே, கூடுதல் வேகம் மூலம் மிடில் ஓவர்களிலும், டெத் ஓவர்களில் ஒரு ‘ஷாக்’ பந்துவீச்சாளராக செயல்படுவார். ஜோஷ் ஹேசில்வுட் சமீப காலத்தில் சூப்பர் கிங்ஸிற்காக பயிற்சி செய்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டுவைன் பிராவோ இப்போது T20 அவுட் ஆப் பார்மில் இருக்கிறார். ஆனால் சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவரது அனுபவம் தேவையாயிருக்கிறது. இது தவிர சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது அணியின் கவலைக்கு மற்றொரு காரணம் ஆகும். தவிர இந்த சீசனில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் கவனிக்க வேண்டிய இளம் வீரராகவும் இருப்பார்.