தமிழக ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் வட்டி விகிதம் குறைப்பு – அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றிய முக்கிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்:
தமிழக அரசு அதன் ஊழியர்களுக்கு அதன் சங்கங்கள் மூலம் கடன் வழங்கபடுகிறது. இதற்கான வட்டி விகிதங்களை அரசு நிர்ணயிக்கிறது. இதேபோல், அரசின் ஊழியர்களுக்கு பல நலத்திட்டங்களை, சிறப்பு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. அரசின் அனைத்து முக்கிய பணிகளும் அரசு ஊழியர்கள் மூலமாக தான் மக்களுக்கு சென்றடைகிறது என்கிற காரணத்தால் அரசு ஊழியர்களுக்கு பல நன்மைகள் வழங்கப்படுகின்றது. அவர்கள் சார்பில் வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பிப்.27 போலியோ சொட்டு மருந்து முகாம் – பெற்றோர்கள் கவனத்திற்கு!
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் போன்றவை சரியான காலத்தில் உயர்த்தி அளிக்கப்பட்டு வருகின்றது. அரசு ஊழியர்களுக்கு என்று தனியாக பல்வேறு சங்கங்கள் உள்ளது. அதில், ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது. இதற்கான வட்டிவிகிதங்ககளை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. முன்னதாக வட்டி விகிதல் 11.50 சதவீதமாக இருந்தது.
தீவிரமடையும் உக்ரைன், ரஷ்யா போர் – தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!
தற்போது உறுப்பினர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு கடன்களுக்கான வட்டி விகிதம் 11.50லிருந்து 11.25 சதவீதமாக குறைக்கப்படுகின்றது. இதற்கான அதிரகாரப்பூர்வ அறிவிப்பானது திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. கடன்தொகைக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதை அடுத்து உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.