தமிழகம் முழுவதும் பிப்.27 போலியோ சொட்டு மருந்து முகாம் – பெற்றோர்கள் கவனத்திற்கு!

0
தமிழகம் முழுவதும் பிப்.27 போலியோ சொட்டு மருந்து முகாம் - பெற்றோர்கள் கவனத்திற்கு!
தமிழகம் முழுவதும் பிப்.27 போலியோ சொட்டு மருந்து முகாம் - பெற்றோர்கள் கவனத்திற்கு!
தமிழகம் முழுவதும் பிப்.27 போலியோ சொட்டு மருந்து முகாம் – பெற்றோர்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் அரசால் நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இதனை 27ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் நடத்த உள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் போலியோ சொட்டு மருந்து தமிழக அரசால் செலுத்தப்படுகிறது. இதனால் கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோவால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது கொரோனா பரவல் உள்ள சூழலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படாமல் இருந்தது. அத்துடன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்த சூழலில் வருகிற 27ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

மார்ச் 1 முதல் முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – அரசு உத்தரவு!

அதன்படி தமிழகத்தில் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ செலுத்த வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் முகாமிற்கு வருகை புரிபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக தற்போது கொரோனா பரவல் இருப்பதால் வருகை புரிபவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அத்துடன் குழந்தையுடன் ஒருவர் மட்டுமே வர வேண்டும்.

தீவிரமடையும் உக்ரைன், ரஷ்யா போர் – தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!

இந்த சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஒரு மாதத்திற்கு முன்பாக சொட்டு மருந்து செலுத்திய குழந்தைகளும் மீண்டும் சொட்டு மருந்து செலுத்த வேண்டும். மேலும் சொட்டு மருந்து செலுத்தாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் சொட்டு மருந்து வழங்க வேண்டும். சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தையின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் உதவி புரிகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!