மார்ச் 1 முதல் முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – அரசு உத்தரவு!
டெல்லியில் தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மார்ச் 1 முதல் உயிரியல் பூங்காவை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
கூடுதல் தளர்வுகள்
கடந்த மாத துவக்கத்தில் இருந்து தீவிரமடைந்து வரும் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து டெல்லி அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வார இறுதி ஊரடங்கு நீக்கம் உள்ளிட்ட சில தளர்வுகளை அளித்துள்ள டெல்லி அரசாங்கம் ஒரு சில கட்டுப்பாடுகளை மட்டும் செயல்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து டெல்லி முழுவதும் ஊரடங்கு தளர்வுகளை அளிப்பது தொடர்பாக DDMA கூட்டம் நாளை (பிப்.25) நடத்தப்பட இருக்கிறது.
தீவிரமடையும் உக்ரைன், ரஷ்யா போர் – தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!
இந்நிலையில் அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன், டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா மார்ச் 1 முதல் ஆன்லைன் டிக்கெட் முறையுடன் மீண்டும் திறக்கப்படும் என்று மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மிருகக்காட்சி சாலை மீண்டும் திறக்கத் தயாராகி வருவதால், கொரோனா பொருத்தமான நடத்தையை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய நிர்வாகம் அனைத்து பிரிவு மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றம் மறுப்பு!
இதற்கு முன்னதாக தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு மிருகக்காட்சி சாலை சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்தது. மேலும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொது மக்களுக்கான மிருகக்காட்சி சாலை மூடப்பட்டு, அதன் இணையதளத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணைப்பு முடக்கப்பட்டது. இப்போது டெல்லி முழுவதும் நோய்த்தொற்று நிலவரம் சரிவடைந்து வருவதை கருத்தில் கொண்டு மிருகக்காட்சி சாலையை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.