அபராத வசூலில் சாதனை நிகழ்த்திய டிக்கெட் பரிசோதகர்கள் – விவரம் இதோ!!
இந்திய ரயில்வேயில் பணிபுரியும் சென்னை மண்டலத்தை சேர்ந்த 2 டிக்கெட் பரிசோதகர்கள் அதிகளவு அபராதம் வசூலித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். இது குறித்த ஸ்வாரசியமான தகவலை இப்பதிவில் காணலாம்.
அபராதத்தில் சாதனை
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுப் போக்குவரத்து ரயில்கள். ஏனென்றால், ரயில் பயணங்கள் மிக குறைந்த விலையில் இருப்பதால் மக்கள் பலரும் இந்த சேவைகளை பெறுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், இந்திய ரயில்வே நிர்வாகமும் பயணிகளுக்கு மின்சார ரயில், மெட்ரோ, வந்தே பாரத் போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்த சேவைகளை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது அபராதமும் விதிக்கப்படுகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
TNPSC தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – அட்டவணை வெளியீடு!!
அந்த வகையில், ரயில்களில் பயணம் செய்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது அபராதம் விதித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர் இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள். அதாவது, சென்னை மண்டலத்தை சேர்ந்த நந்தகுமார் என்ற டிக்கெட் பரிசோதகர் சுமார் 1.55 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். அதே போல, ஆரோக்ய மேரி எனும் பெண் பரிசோதகர் கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1.03 கோடி அபராதம் வசூல் செய்து, இந்தியாவில் அதிக அபராதம் விதித்த பெண் டிக்கெட் பரிசோதகர் எனும் சாதனையை பெற்றுள்ளார்.