நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்? பிரதமர் மோடி தொடர் ஆலோசனை!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக வேகமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூன்று முக்கிய குழுக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேம்படுத்த பிரதமர் மோடி இன்று 3 முக்கிய குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி உட்பட பல நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் அந்த மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பின்னர் காலை 9 மணிக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
அதன் பின்னர் நண்பகல் 12.30 மணிக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல உயிர்கள் பறிபோன நிலையில் தற்போது அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 7,8 வாக்குப்பதிவு பிரச்சாரங்களை கொரோனா காரணமாக பிரதமர் ரத்து செய்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதால் மீண்டும் நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.