தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதல்வர் சொன்ன ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி அமோக வெற்றியை தழுவியது. நேற்றுடன் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. இதை தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் 9 லட்சம் பேருக்கு மேல் பயன் பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு, திமுக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. திமுக தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் இந்த ஒரு வருட காலத்தில் திமுக அரசு செய்த சாதனைகள் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதன் காரணமாக 9 லட்சத்து 32 ஆயிரம் ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி 7 லட்சத்து 15 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
‘மாஸ்டர்’ பட நடிகருடன் நடிக்கவிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை – வைரலாகும் தகவல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று 2021 டிசம்பர் மாதத்தில் முதல் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே ஆசிரியர்கள், பென்ஷன் தாரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 14 சதவீதம் அதிகரிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 % ஆக உயர்ந்தது. இதையடுத்து 2022 ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வு காரணமாக அரசு ஊழியர்கள் அதிகமாக பயன் அடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு ரூ.8700 கோடிக்கு மேலாகச் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டது. இதையடுத்து, 22 லட்சத்து 20 ஆயிரத்து 109 பேர் நகைக் கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாகவும், மகளிர் சுய உதவிக் குழுக்களால் 54 லட்சத்து 5 ஆயிரத்து 400 பேர் கடன் பெற்றதாகவும், அவ்வாறு வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ததால் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 பேர் பயன்பெற்றதாகவும், அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் மூலமாக 68,800 பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.