முதியோர்களுக்கான உதவித்தொகை உயர்வு – புதுவை முதல்வர் திடீர் அறிவிப்பு!
புதுச்சேரியில் முதியோர்களுக்கான உதவித்தொகை ரூ.7000 வரைக்கும் உயர்த்தப்பட போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதே போல, இன்று நடைபெற்ற கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளையும் வழங்கியுள்ளார்.
புதுவை அரசின் உதவித்தொகை
புதுச்சேரியில் 7-ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் என பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அந்த கூட்டத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை மற்றும் விதவை பெண்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை குறித்து விவாதிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நலிவடைந்த நிறுவனங்களுக்கு அரசு மானியம் – அரசின் சூப்பர் திட்டம்!
அப்போது, அந்த சட்டப்பேரவை கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி பழங்குடியின மக்கள் மீது எனக்கு அதிக அக்கரை இருக்கிறது எனவும், எனது பதவியில் பழங்குடியின மக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்க வேண்டும் என நினைக்கிறன் என கூறியுள்ளார். மேலும், அந்த பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதியோர்களுக்கான உதவித்தொகையையும் உயர்த்தியுள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும், இருளர் இனம், பழங்குடியின மக்கள் மற்றும் நரிக்குறவர் குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே நிலம் ஏற்பாடு செய்து இலவச மனைப்பட்டா வழங்கி அவர்களுக்கு தகுந்த வீடு கட்டி தரப்படும் என அறிவித்துள்ளார். மேலும், 100 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூபாய் 7000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் 90 வயது முதல் 100 வயது வரையிலான முதியவர்களுக்கு உதவி தொகை 4500 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்