தமிழகத்தில் ஆவின் பால் விலை அதிகரிப்பு – அரசு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஆவின் பால் விலை உயர்வு
தமிழகத்தில் ஆவின் பால் சென்னையில் மட்டும் 14 லட்சம் லிட்டரும் மற்ற மாவட்டங்களில் 14 லட்சம் லிட்டரும் விற்பனையாகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலை ரூ. 3 குறைக்கப்பட்ட பின்னர். தினசரி பால் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பால், கொழுப்பு சத்து அடிப்படையில், மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது. இதில் ஆரஞ்ச் நிற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட 500 மி.லி ஆவின் பால் 24 ரூபாய்; பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய், நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதியோர்களுக்கான உதவித்தொகை உயர்வு – புதுவை முதல்வர் திடீர் அறிவிப்பு!
தற்போது ஒரு பாக்கெட் பால் விற்பனை செய்வதன் வாயிலாக பால் விற்பனை டீலர்களுக்கும், பார்லர் உரிமையாளர்களுக்கும் ஒரு ரூபாய் கமிஷன் கிடைக்கிறது. இந்த நிலையில் ஆவின் பாலை ஒரு பாக்கெட்டில் மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். இந்த நேரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளது. 500 மி.லி., பால் பாக்கெட் ரூ. 34 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் அதிக அளவில் ஆவின் பாலை வாங்க படையெடுத்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
தற்போது ஹோட்டல்கள், கேன்டீன்கள், டீ கடைகள் வைத்துள்ளவர்கள் ஆவின் பாலை அதிகம் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஆவின் அரசின் ஆவின் பால் விலையும் உயர்ந்து வருவது பொது மக்களுக்கு பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.கூடுதல் விலையில், பால் விற்பனை செய்யும் டீலர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்