மக்களவை தேர்தலை முன்னிட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பிசி) மாத ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்த்தப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் உயர்வு
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பிசி) மாத ஓய்வூதியம் ரூ. 3000ல் இருந்து ரூ.4000ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். பல்வேறு பிரிவுகளில் வயது வரம்புகளை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை தற்போதைய நிலையில் இருந்து ரூ.4,000 ஆக உயர்த்துவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
முத்தரப்பு கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இவை நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஏழு முறை எம்.எல்.ஏ.வாக தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காக குப்பம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், நாட்டில் 400 லோக்சபா தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் NDA மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.