தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் மேல்முறையீட்டு பணிகள் தொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை:
திமுக அரசு கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் பலனடைந்தனர். இதன் பிறகு விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை நீக்கி மேல்முறையீடு செய்தவர்களையும் சேர்த்து இறுதியாக தற்போது மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர். ஆனால் திட்டத்தில் விண்ணப்பித்து பலனடையாத பலரும் மேல்முறையீடு செய்வது குறித்து அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அடுத்த கட்ட அறிவிப்பு குறித்து கவலையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து தகுதி பட்டியலுக்கு வந்து நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் கட்டாயம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.