இலங்கையில் குறைந்தபட்ச ஊதியத்தை 40% அதிகரிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
ஊதியம்:
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வைத்து அந்த நாட்டின் வளர்ச்சி கனக்கிடப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல் இலங்கையின் பொருளாதாரம் ஆனது பெரும் வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்ததே இதற்க்கு காரணமாக உள்ளது. எனவே மக்களுக்கான குறைந்தபட்ச ஊதியமானது 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
SSC ஆணையத்தில் SI வேலைவாய்ப்பு – 4180+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
நிதி நெருக்கடியிலிருந்து பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருவதால் வாழ்க்கைச் செலவுகளுடன் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, குறைந்தபட்ச ஊதியத்தை 40% அதிகரிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வறுமையில் வாடும் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.