பெண் குழந்தைகளின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதற்காக எல்.ஐ.சி நிறுவனமானது கன்யாதான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கன்யாதான் சேமிப்பு திட்டம்:
இக்காலத்தில் பெண் குழந்தைகளின் படிப்புக்கு மட்டுமல்லாது திருமணத்திற்கும் அதிக அளவு பணம் தேவைப்படுகிறது. இதனை நினைத்து பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் வருந்தி வருகிறார்கள். அவர்களது வருத்தத்தை போக்க எல்.ஐ.சி ஆனது கன்யாதான் என்ற சிறந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு 17 லட்சம் வரை வட்டி கிடைக்கும். இத்திட்டத்தில் சேர விரும்பும் பெண் குழந்தையின் வயது 1 ஆகவும் தந்தையின் வயது 30 ஆகவும் இருக்க வேண்டும்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்த சேமிப்பு திட்டத்தில் இணைந்த பிறகு நாளொன்றுக்கு ரூ.121/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.3,600/- செலுத்த வேண்டும். இவ்வாறு 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக செலுத்தினால் திட்டத்தின் முடிவில் ரூ.27,000,000/- பெறலாம். இதில் ரூ.10,80,000/- நீங்கள் செலுத்திய பணம் மற்றும் ரூ.17,000,00/- வட்டியாகும். இக்கன்யாதான் திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் பணத்தை 13 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம்.