தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.
வானிலை நிலவரம்:
கடந்த 24 மணி நேரத்தின் நிலவரப்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. மேலும் ஈரோட்டில் அதிகபட்சமாக 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நாட்களை விட தற்போது தமிழகத்தில் வெப்பநிலையானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நாமக்கலில் குறைந்தபட்ச வெப்பம் 16.0 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
50 ரூபாய் நோட்டு மூலம் ரூ.25,000,00 வருமானமா? சூப்பர் சான்ஸா மிஸ் பண்ணிடாதீங்க மக்களை!
27.03.2024 தென்தமிழகத்தில் ஓரிரு முதல் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மார்ச் 28 முதல் 31 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும். ஏப்ரல் 1 மற்றும் 2 தென்தமிழகத்தில் ஓரிரு முதல் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை.