EPFO திட்டத்தின் குறைந்த பட்ச ஓய்வூதிய தொகை உயர்வு – நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்வி!
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் மாதாந்திர ஓய்வூதிய தொகையின் குறைந்த பட்ச அளவை உயர்த்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்துள்ளது.
ஓய்வூதிய தொகை:
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களின் பணியாளர்கள் குறிப்பிட்ட சதவீதத்தை வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். ஊழியர்களின் வைப்பு நிதி கணக்கில் நிறுவனமும் அதே சதவீத அளவில் தொகையை செலுத்த வேண்டும். இந்த தொகையை ஊழியர்கள் தங்களுக்கு தேவையான சமயத்தில் அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் எடுத்துக் கொள்ள முடியும். அதில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியை போலவே, ஊழியர்கள் ஓய்வூதிய திட்டமும் உள்ளது. அதற்காக மாத ஊதியத்தில் 8.33% செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ.15,000 அதிகபட்சமாக ஓய்வூதிய கணக்கில் செலுத்த முடியும். இதனால் ஊழியர்கள் தங்கள் பணிக்காலம் முடிந்த பின்னர், மாதம் ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக பெறுவார்கள். இந்த குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் சிந்தா அனுராதா அவர்கள் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்துவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால் மத்திய அரசின் சார்பாக EPS திட்டதில் ஊழியர்கள் பெறும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உள்ள நிலையில், அரசு அதற்காக கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக மட்டுமே தெரிவித்துள்ளது.