சென்னை வாழ் மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – மெட்ரோ ரயிலில் இலவச பயண அறிவிப்பு!
மெட்ரோ நிர்வாகம் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகளை தீவிரம் காட்டி விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இப்பணிகள் முடிந்த பின்னர் பயணிகளுக்கு இலவச பயணத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்:
மத்திய அரசு நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்கியது. அதன்படி, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடங்களில் கடந்த சில ஆண்டுகளாக சேவை நடந்து வரும் நிலையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
EPFO திட்டத்தின் குறைந்த பட்ச ஓய்வூதிய தொகை உயர்வு – நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்வி!
Exams Daily Mobile App Download
அதன்படி, மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்திற்கு இப்பணி நடைபெற்று வருகிறது. புறநகர் ரயில் சேவையாக உள்ள இந்த திட்டத்தின் பணிகள் முடிந்த பின்னர், 3 வழித்தடங்களிலும் இரண்டு வாரத்திற்கு குறுகிய கால சலுகையாக பொதுமக்கள் இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சென்னை வாழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.