மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 15% அகவிலை நிவாரணம் உயர்வு! அரசு ஒப்புதல்!

0
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் - 15% அகவிலை நிவாரணம் உயர்வு! அரசு ஒப்புதல்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் - 15% அகவிலை நிவாரணம் உயர்வு! அரசு ஒப்புதல்!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 15% அகவிலை நிவாரணம் உயர்வு! அரசு ஒப்புதல்!

இந்தியாவில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த மாதம் 4%அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது பங்களிப்பு ஓய்வூதிய ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரணத்தை உயர்த்தியுள்ளது.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அரசு அகவிலைப்படியை 4 % உயர்த்தியது. தீபாவளி பண்டிகை நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 7 – வது ஊதியக்குழு பரிந்துரையின் படி அகவிலைப்படி 38% ஆக தற்போது அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஜூலை 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவித்தது.

Exams Daily Mobile App Download

மத்திய அரசை தொடர்ந்து ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களும் தங்களது ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை அளித்தது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு பங்களிப்பு பென்ஷன் திட்ட ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 15% உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்.31ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

பழைய ஓய்வூதிய திட்டம் , பெண்களுக்கு உதவித்தொகை, அதிக வேலைவாய்ப்புகள் -ஹிமாச்சலில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் அகவிலை நிவாரணத் தொகை அடிப்படை கருணைத் தொகை 381 %ல் இருந்து 396% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தொகை அதிகரிக்கும். மேலும் இவை கடந்த ஜூலை மாத தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கடந்த மாதங்களுக்கான அகவிலை நிவாரண நிலுவைத்தொகையும் கிடைக்கும் என்றும் தகவல் வந்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!