பழைய ஓய்வூதிய திட்டம் , பெண்களுக்கு உதவித்தொகை, அதிக வேலைவாய்ப்புகள் -ஹிமாச்சலில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்!
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப்ரியங்கா காந்தி அவர்கள் தற்போது ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் உள்ளார்.
வாக்குறுதிகள்:
நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு சட்டப்பேரவை தேர்தல் மாநில அரசை தேர்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 12-ம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடக்க இருப்பதாகவும், டிசம்பர் 8ம் தேதி அதற்கான வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆபத்து நிறைந்த மொபைல் செயலிகள் – உடனே delete செய்யுங்க.. கூகுள் விடுத்த எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள காங்கிரா என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப்ரியங்கா காந்தி தேர்தல் வாக்கு சேகரிப்பு மாநாட்டில் பேசினார். அதில், ஹிமாச்சலில் காங்கிரசின் வந்தால் 1 லட்சம் வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்படும் என்றும், இதற்கான செயல்பாடுகள் முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்றும், பெண்களுக்கு ரூ.1,500 நிதி உதவியாக அளிக்கப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், தற்போதைய பாஜக ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் பேசியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மாநிலம் அடுத்த 5 ஆண்டுகளில் முன்னேற்றமடைந்து விடும் என்றும் உறுதி அளித்துள்ளார்.