இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – அச்சத்தில் பொதுமக்கள்!
நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 16,906 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா தினசரி பாதிப்பு உயர்வு:
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. அதாவது இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தீவிரமாக இருந்தது. அதன்பிறகு, குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகம் எடுத்து உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்றவைகளை பொதுமக்கள் மீண்டும் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு 13,615 ஆக இருந்த நிலையில் இன்று 16,906 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 36 லட்சத்து 69 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 15,447 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 11 ஆயிரத்து 874 ஆக உயர்ந்தது. தற்போது 1,32,457 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
UPSC வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ || ஜூலை 14 விண்ணப்பிக்க இறுதி நாள்!
இது நேற்றை விட 1,414 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 45 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,25,519 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் நேற்று 11,15,068 டோஸ்களும், இதுவரை 199 கோடியே 12 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி இதுவரை 86.77 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,59,302 மாதிரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இப்படி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.