தமிழக அரசு கல்லூரிகள் தற்காலிக பேராசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணி நீட்டிப்பு உத்தரவு!

0
தமிழக அரசு கல்லூரிகள் தற்காலிக பேராசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பணி நீட்டிப்பு உத்தரவு!
தமிழக அரசு கல்லூரிகள் தற்காலிக பேராசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பணி நீட்டிப்பு உத்தரவு!
தமிழக அரசு கல்லூரிகள் தற்காலிக பேராசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணி நீட்டிப்பு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு கலை, கல்லூரிகளில் தற்காலிக பணியில் அமர்த்தப்பட்டுள்ள 4,681 பேராசிரியர்களுக்கு மேலும் 3 வருடங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

உயர்கல்வித்துறை:

நாட்டில் கடந்த 2 வருடங்களாக கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம், ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளிகளும் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்தது. இதே போல் கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சனிக்கிழமை விடுமுறை? அரசு விளக்கம்!

அது மட்டுமின்றி 10, மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல் குறையத் தொடங்கிய பிறகு கல்லூரிகள் முழு நேரமும் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதன் காரணமாக அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வந்தது. இந்நிலையில் தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தற்காலிக பேராசிரியர்களை பணியமர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 2022-23 ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மொத்தம் 3331 காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு டெட் தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்களுக்கும் தற்காலிக பணி நியமன அடிப்படையில் பணியமர்த்தி கொள்ள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 4,681 தற்காலிக பேராசிரியர்களை 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!