WFH ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு WFH ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகளை வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்நிலையில், கூடிய விரைவில் அந்த விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
WFH ஊழியர்
கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தான் வேலைபார்த்து வந்தனர். இதற்கு பிறகு ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைய குறைய பழையபடி ஊழியர்கள் அலுவலங்கங்களுக்கு சென்று வேலை பார்த்து வந்தனர். அனால், தற்போது வரைக்குமே ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே தான் வேலைபார்த்து வருகின்றனர். அதாவது, மூத்த ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு சென்று வேலைபார்த்து வருகின்றனர்.
தமிழக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – மாநகராட்சி எச்சரிக்கை!
இந்நிலையில், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கான விதியை வெளியிட்டது. அதாவது, பொருளாதார மண்டலத்தில் (SEZ) 50 சதவீத ஊழியர்கள் கலப்பு முறையில் வேலை செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வருடம் வரைக்கும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் எனவும் தேவைப்பட்டால் அதற்கு அதிகமாகவும் WFH வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், இந்த விதிமுறைகளை மத்திய அரசு இந்த வாரம் முதல் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஊழியர்களுக்கான மடிக்கணினிகள் மற்றும் அனைத்து உபகரணங்களையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் எனவும், 50%க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய விரும்பினால் நிறுவனத்தின் அனுமதி பெற்று WFH பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.