ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் அறிமுகம்!
நாட்டில் உள்ள ரேஷன் டீலர்களின் கடைகள் பொது சேவை மையமாக மாற்றப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த புதிய திட்டத்தின் மூலமாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் ரேஷன் கார்டுதாரர் இருவருமே பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுசேவை மையம்:
மத்திய அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு அவ்வப்போது பல புதிய வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசு ரேஷன் கார்டுதாரர்களின் வசதிக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 3.5 கோடி ரேஷன் டீலர்கள் இருக்கின்றனர். இவர்களில் 80 ஆயிரம் ரேஷன் டீலர்களின் கடைகள் மட்டும் பொதுசேவை மையமாக செயல்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், உத்திரப்பிரதேச மாநிலத்தை தொடர்ந்து பல மாநிலங்களிலும் இந்த வசதி கிடைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ரேஷன் டீலர்களின் கடைகள் பொதுசேவை மையமாக செயல்படுவது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த புதிய திட்டத்தின் மூலமாக ரேஷன் ஊழியர்கள் மற்றும் ரேஷன் கார்டுதாரர் இருவருமே பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டீலர்களின் கடைகள் பொதுசேவை மையமாக மாற்றப்பட்ட பிறகு கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இந்த பொது சேவை மையத்தின் மூலமாக அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் 900 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – மாநகராட்சி அறிவிப்பு!
மேலும், ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா, பிஎம் உஜ்வாலா இணைப்பு, பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் ஓய்வூதியத் திட்டம், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா, பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டு திட்டம் ஆகிய வசதிகளையும் பொதுமக்கள் இந்த பொது சேவை மையத்தின் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்திய தேர்தல் ஆணையம் தொடர்பான சேவைகள், பாஸ்போர்ட் மற்றும் பான் விண்ணப்பங்கள், வங்கி தொடர்பான சேவைகள், காப்பீட்டு சேவைகள் முதலான அனைத்து சேவைகளையும் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.