தமிழக பள்ளிகளில் 900 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் மாநகராட்சி பள்ளிகளில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை சமாளிக்க 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் நியமனம்:
தமிழகத்தில் 2022 – 2023ம் கல்வியாண்டில் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு அரசின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் இல்லாமல், பற்றாக்குறை நிலவுகிறது. சுமார் 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய பள்ளிக்கல்வித்துறை இப்பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது. மேலும் அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. அம்மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அதில் இந்தாண்டு மட்டும் 10,7000 ஆக மேலும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக மாநகராட்சி மேயர், ஆணையர் தலைமையில் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Post Office ல் மாதம் ரூ.2500 வரை பணத்தை அள்ளி தரும் திட்டம் – முழு விவரம் இதோ!
இந்த கூட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு எவ்வளவு ஆசிரியர்கள் தேவை என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் 900 ஆசிரியர்கள் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேலாண்மைக் குழுக்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே இந்த ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.