PM Kisan திட்ட பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ‘Helpline’ அறிமுகம்!
இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6000 வரை விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்த திட்டத்தில் 11வது தவணை செலுத்தப்பட்டுள்ளது. இந்த தவணை தொகை பெறாதவர்களுக்கு தற்போது Helpline எண்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பயனாளிகள் கவனத்திற்கு
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டம் மத்திய அரசால் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை என ஒரு வருடத்திற்கு ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகையின் மூலமாக பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து இத்திட்டத்தில் பயனாளிகள் தங்களின் e-KYC விவரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே 31ம் தேதி அன்று 11வது தவணை தொகை விடுவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சில பயனாளிகள் கணக்கில் 11வது தவணை தொகை கிடைக்கவில்லை. இதற்கு e-KYC, ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவை தவறாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மயூவுக்காக கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா – பரிதாப நிலையில் பாக்கியா! ப்ரோமோ ரிலீஸ்!
இதில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு சரியான காரணத்தை கண்டறிய pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயனாளியின் நிலைக்குச் சென்று 11வது தவணைப் பெறாததற்கான சரியான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதை தெளிவுப்படுத்தி கொள்ள Helpline எண்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, உங்கள் சந்தேகங்களை கேட்டறிய 011-24300606 என்ற கட்டணமில்லா எண் அல்லது 155261 என்ற உதவி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.