மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – DA நிலுவைத்தொகை செட்டில்மெண்ட்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 18 மாதங்களாக நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருந்தது. இந்த 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
DA நிலுவைத்தொகை:
அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது ஊழியர்களுக்கு பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் மட்டுமே சம்பள உயர்வு 28 சதவீதமாக இருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வழங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி அடிப்படையில் சம்பளம் வாங்கி கொண்டிருக்கின்றனர்.
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!
எப்போதும் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜுலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். இந்த சம்பள உயர்வால் கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயன் பெறலாம். நிலுவையில் உள்ள அகவிலைப்படி சம்பள உயர்வு 3% உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூபாய் 20 ஆயிரம் வரை உயரக்கூடும். அகவிலைப்படி சம்பள உயர்வு அளிக்கப்பட்டாலும் அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை அளிக்கப்படாமல் இருந்தது.
இந்திய இராணுவத்தில் 10வது முடித்தவருக்கு புதிய வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இதனால் அகவிலைப்படி நிலுவைத் தொகைகளுக்காக அரசு ஊழியர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இதன்படி அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய 18 மாதத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்து, அரசுக்கும் அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், விரைவில் 18 மாதத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.