அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கான முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு உத்தரவு!!
இந்தியாவில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அரிசி, கோதுமை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக உணவு பொருட்கள் வழங்குவதற்காக பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மே, ஜூன் மாதங்களில் மூன்று கட்டமாக இலவச உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
மாநிலத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு? முதல்வர் விளக்கம்!!
கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய உணவு பாதுகாப்பு துறை உணவு தானியங்களை வழங்கியது. அனைத்து மாநிலங்களுக்கும் உணவு தானியங்களை வழங்கியது. தற்போது அடுத்த தாக்குதலாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. அதனால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது 2022ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி – சுகாதார அமைச்சகம் தகவல்!
மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி ரேஷன் கடைகளில் தலா நபருக்கு 5 கிலோ கோதுமை, அரிசியை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பொருட்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.