மாநிலத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு? முதல்வர் விளக்கம்!!
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த புதன் கிழமை மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய அம்மாநில முதலமைச்சர் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த மக்களது குழப்பத்தை தீர்க்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.
ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பெருமளவில் பொருளாதார இழப்பு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொற்று பரவல் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று முதன் முதலில் இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் பரவியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
திருப்பதி செல்வோருக்கு ஒரு குட் நியூஸ் – பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்!சந்தோஷத்தில் மக்கள்!
அவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா தொற்று ஓமைக்ரான் தொற்றாக இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். மேலும் மக்கள் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்று அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் மருத்துவ குழுவுடன் நடத்திய ஆலோசனை முடிவில் மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது கர்நாடகா மாநிலத்தில் புதன்கிழமை நிலவரப்படி 399 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி – சுகாதார அமைச்சகம் தகவல்!
அந்த வகையில் இதுவரை 7,255 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் கொரோனா குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அனைவரும் முறையே கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் குறித்து பெற்றோர்கள் பயப்படவேண்டாம். ஏனெனில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் விளக்கியுள்ளார். அதனை தொடர்ந்து தொற்று பரவல் அதிகரிப்பதன் அடிப்படையில் ஊரடங்கு பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.