கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி – சுகாதார அமைச்சகம் தகவல்!

0
கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி - சுகாதார அமைச்சகம் தகவல்!
கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி - சுகாதார அமைச்சகம் தகவல்!
கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி – சுகாதார அமைச்சகம் தகவல்!

தற்போது உலக மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மாறுபாடு வகையான ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிதாக 2 பேருக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

ஒமிக்ரான் தொற்று

உலக நாடுகளில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்கொண்டுள்ளது. மற்ற உருமாறிய கொரோனா வைரஸ் வகையை விட அதி தீவிரமாக பரவக்கூடியதும், வலிமை வாய்ந்ததுமாக கருதப்படும் இந்த ஒமிக்ரான் வைரஸ் ஒவ்வொரு நாட்டு அரசுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. இப்படி இருக்க பல்வேறு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், சிங்கப்பூரை 2 சேர்ந்த பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஜீ தமிழ் சேனலின் ப்ரைம் டைம் சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் அதிகரிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி!

அதாவது, சிங்கப்பூரில் உள்ள சர்வதேசிய விமான நிலையத்தில் பயணிகள் சேவை ஊழியராக பணியாற்றி வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்தவர்கள் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அதாவது சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்த 24 வயதான பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்பெண் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் நேரடி தொடர்பில் இருந்ததால், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இது தவிர ஜெர்மனியில் இருந்து கடந்த 6ம் தேதியன்று சிங்கப்பூர் திரும்பிய 46 வயதான பெண் ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து அந்நாட்டில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை – ஜன.1 முதல் அமல்! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

இதற்கிடையில் சிங்கப்பூரில் நேற்று (டிச.9) ஒரு நாளில் 682 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சுகாதார அறிக்கை தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் இதுவரை அந்நாட்டில் 271, 979 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட துவங்கிய நாள் துவங்கி 779 பேர் மரணமடைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிக்கை கூறுகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!