Vijay TV Big Boss Promo || மனம் விட்டு பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்த ப்ரியங்கா & தாமரை!!
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சில் நாளுக்கு நாள் மக்களுக்கு பரபரப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ காட்சிகள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ப்ரோமோ வெளியீடு:
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 5 வது சீசனில் உள்ளது. இந்த கடுமையாக கொரோனா பெருந்தொற்று கால கட்டத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த சீசனில் முதலில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஒரு வாரத்திலேயே நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அடுத்தபடியாக நாடியா சாங், சின்னப்பொண்ணு, அபிஷேக், சுருதி, ஐக்கி, இசை போன்றவர்கள் வரிசையாக வெளியேற்றப்பட்டனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில், வைல்டு கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய இருவரும் போட்டியில் இறக்கப்பட்டனர்.
அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கான முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு உத்தரவு!!
இவர்களுக்கு முன்னதாக அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார். ஆனால் மீண்டும் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக சண்டையும், விவாதமும் நடந்து கொண்டு தான் இருக்கும். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து தாமரை போட்டி புரியவில்லை என்று கூறி வருகிறார். ஆனால் அடுத்தவர்களை தாக்கும் வகையில் மிகவும் கடுமையாக வாக்குவாதம் செய்தும் வருகிறார். தொடர்ந்து தாமரை மற்றும் ப்ரியங்காவிற்கு இடையில் சண்டை வெடித்து வருகிறது.
திருப்பதி செல்வோருக்கு ஒரு குட் நியூஸ் – பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்!சந்தோஷத்தில் மக்கள்!
அதிலும், இந்த வாரம் எபிசோடில் இருவரும் வேறு வேறு குழுவாக இருப்பதால் கருத்து மோதல்கள் மாறி மாறி நடந்து வருகிறது. இதனால் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது. இந்நிலையில், நேற்று மிகவும் காரசாரமான விவாதம் மூலமாக மோதிக் கொண்டனர். ஆனால் தற்போது வெளியான ப்ரோமோவில் ப்ரியங்கா மற்றும் தாமரை இருவரும் மனம் விட்டு பிரச்சனைகளை பற்றி பேசிக் கொள்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் இருவரும் மீண்டும் சமாதானம் ஆகி விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.