திருப்பதி செல்வோருக்கு ஒரு குட் நியூஸ் – பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்!சந்தோஷத்தில் மக்கள்!

0
திருப்பதி செல்வோருக்கு ஒரு குட் நியூஸ் - பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்!சந்தோஷத்தில் மக்கள்!
திருப்பதி செல்வோருக்கு ஒரு குட் நியூஸ் - பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்!சந்தோஷத்தில் மக்கள்!
திருப்பதி செல்வோருக்கு ஒரு குட் நியூஸ் – பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்!சந்தோஷத்தில் மக்கள்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு நன்மை தரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதில் குறிப்பாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வந்தன.

கொரோனா தடுப்பூசி செலுத்திய 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி – சுகாதார அமைச்சகம் தகவல்!

கொரோனா நோய் பரவல் காரணமாக இதனை கட்டுப்படுத்துவதற்கு 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் முறை மட்டும் அமலில் இருந்தது. இதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதன் விளைவாக தேவஸ்தானம் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டது. இதனை பக்தர்கள் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதற்கு முன் ஆந்திர மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பஸ் டிக்கெட்டுடன் ரூ.300 தரிசன டிக்கெட்டையும் வழங்கி வந்தது.

ஜீ தமிழ் சேனலின் ப்ரைம் டைம் சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் அதிகரிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி!

கொரோனா தொற்று காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் பஸ் டிக்கெட் உடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்க உள்ளது. இதனால் தற்போது நாள்தோறும் 1000 தரிசன டோக்கன்களை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பேருந்துகளில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி பேருந்துகளில் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு செய்யும் பக்தர்கள் கூடுதலாக ரூ.300 கட்டணம் செலுத்தினால் தரிசன டிக்கெட்டும் தற்போது வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!