தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் 2007ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னதாக பிறந்த மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

கொரோனா தொற்றின் பாதிப்புகள் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியதை அடுத்து கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 2021ல் அவை மக்களுக்கு செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் நம் நாட்டில் முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி? பள்ளிக்கல்வித்துறை முடிவு!

மூன்றாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிக அளவிலானவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வமாக ஈடுபட்டதால் தடுப்பூசி உற்பத்தியின் அளவு குறைவாக இருந்ததாலும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதனால் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க தொடங்கியது. கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமத அளிக்கப்பட்டது.

‘உடம்ப குறைச்சு பிட் ஆகனும்’ – 2022 New Year Resolution Funny Moments Examsdaily!

ஆனால் கொரோனா 3ம் அலை பாதிப்புகள் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்த காரணத்தால் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக போதிய இடம் ஒதுக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைக்க ஆசிரியர் ஒருவரை தலைமையாசிரியர்கள் நியமிக்க வேண்டும். 2007 மற்றும் அதற்கு முன் பிறந்த பள்ளிக்குழந்தைகளின் விவரங்களை அரசிடம் அளிக்கவும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!