தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி? பள்ளிக்கல்வித்துறை முடிவு!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி? பள்ளிக்கல்வித்துறை முடிவு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி? பள்ளிக்கல்வித்துறை முடிவு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி? பள்ளிக்கல்வித்துறை முடிவு!

தமிழகத்தில் இந்த வருடமும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகளை நடத்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் மிகவும் அதிகமான பாதிப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு சென்று நேரடி வகுப்புகளை கவனித்து வந்தனர். ஆனால் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இடையிடையே, தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்து உள்ள ஓமிக்கிரான் வைரஸ் பரவல் காரணமாகவும் பள்ளிகளை திறக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

அதற்கான கட்டுப்பாடுகளை நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருந்தார். இந்நிலையில் இறுதி தேர்வுகள் நெருங்கும் நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே தேர்வு இன்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்படுவார்கள் என்பது போன்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகளில் தான் கவனம் செலுத்தி வருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு ரத்து – அரசு திடீர் அறிவிப்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி!

அதன் காரணமாக மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுடன் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் சேர்த்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அனைவருக்கும் தேர்வுகளை நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!