முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-28
லாலா லஜபதி ராய் பிறந்த தினம்
பிறப்பு:
- ஜனவரி 28,1865ல் பிறந்தார்.
சிறப்பு:
- ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார்.
- இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
- இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு.
- லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர்.
- ‘லாலா லஜபத் ராய்’ பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் லட்சுமி காப்புறுதி கம்பெனி ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.
- பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தார்.முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என்று முழங்கினார்.
- பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்தது. 6 மாதங்களில் விடுதலையானார்.
- இவர் 1888ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
- 1905ம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது.
- ‘யங் இந்தியா’ என்ற நூலை எழுதினார். வெளியிடப்படும் முன்பே இந்தியா & பிரிட்டனில் இந்த நூலை பிரிட்டிஷ் அரசு தடைசெய்தது.
- இவர் எழுதிய ‘அன்ஹேப்பி இந்தியா’ என்ற நூல் ஆங்கிலேயர் ஆட்சியால் துன்புறும் இந்தியர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டியது.
- காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி கைவிட்டதால், சுயராஜ்ஜியக் கட்சியில் சேர்ந்தார்.
- 1928-ல் லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இயக்கம்: இந்திய விடுதலை இயக்கம்
இறப்பு:
- 17 நவம்பர் 1928,ல் இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்