திருப்பதி ஏழுமலையான் கோவில் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – VIP தரிசனம் ரத்து!
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
VIP தரிசனம்:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கவில்லை. தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ள காரணத்தினால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பழையபடி பக்தர்களுக்கான அனைத்து சலுகைகளையும் தேவஸ்தானம் வழங்கி வருகிறது. சமீபத்தில் தான் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம், அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் துவங்கப்பட்டன.
Exams Daily Mobile App Download
மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் சலுகையும் சமீபத்தில் தான் துவங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஏழை பெண்களின் திருமணத்திற்காக கல்யாண மஸ்து திட்டத்தின் கீழ் 5 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தையும் தேவஸ்தானம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்கமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.
மே 16ம் தேதியன்று பள்ளி, கல்லூரிகள் மூடல் – இதற்காக தான்? அரசு விளக்கம்!
கோடை விடுமுறையால் பக்தர்களின் கூட்டம்அதிகரித்து வருவதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை சேவைகளும் ரத்து செய்யப்பட்டவுள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி பிறந்த இடம் பற்றிய விரிவான புத்தகம் தேவஸ்தான இணையதளத்திலும் கிடைக்கும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். நேற்று மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 62,001 பக்தர்கள் தரிசனம் செய்ய வந்ததாகவும், 32,303 பேர் முடி காணிக்கை செய்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.