மே 16ம் தேதியன்று பள்ளி, கல்லூரிகள் மூடல் – இதற்காக தான்? அரசு விளக்கம்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா தற்போது மரணமடைந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மே 16 அன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நேற்று (மே 13) காலமாகி இருப்பதையடுத்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று (மே.14) முதல் நாளை மறுநாள் (மே.16) திங்கட்கிழமை வரைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபாவின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு துபாயில் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தைப் பருவ மையங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மே 16 திங்கள் அன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், துபாயில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் வரும் செவ்வாய்கிழமை முதல் வகுப்புகளை தொடங்கும் என துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட ட்வீட்டில், ‘துபாயில் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தை பருவ மையங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இன்று (மே.14) முதல் மூடப்பட்டு வரும் மே 17 செவ்வாய் முதல் தங்கள் இயல்பான செயல்பாட்டை மீண்டும் தொடங்கும்’ என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு – ஆசிரியர்கள் அறிவுறுத்தல்!
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அமைச்சகங்கள், துறைகள், கூட்டாட்சி மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது ஜனாதிபதியான ஷேக் கலீஃபா கடந்த 2004 முதல் 2022 வரைக்கும் ஜனாதிபதியாக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.