சென்னை வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அறிவிப்பு – நாளை முதல் போக்குவரத்தில் சில மாற்றங்கள்!
பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அண்ணா சாலை போன்ற பகுதிகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் காரணத்தினால் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது நாளை முதல் 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்து:
பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தற்போது சென்னையில் வாகன போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஜூன் 4-ஆம் தேதியான நாளை முதல் 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
பழைய மகாபலிபுரம் சாலை வழியாக அடையார் செல்ல இருக்கும் வாகனங்கள் அனைத்தும் ஓஎம்ஆர் சர்வீஸ் சாலை வழியாக திரும்பி சர்தார் படேல் சாலையை கடந்து காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் திருப்பி மீண்டும் சர்தார் படேல் சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது அல்லது இந்திரா நகர் சிக்னலில் வலதுபுறம் திரும்பி இந்திரா நகர் 2வது வாட்டர் டேங்க் சாலை மூலமாகவும் செல்லலாம். இதேபோல சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வாகனங்கள் அனைத்துமே ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலைக்கு செல்லலாம். இதுமட்டுமல்லாமல் ஒயிட்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலை செல்லலாம். அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவே இத்தகைய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு சென்னை போக்குவரத்து கழகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.