சென்னையில் முதன்முறையாக பிரமாண்ட மலர் கண்காட்சி – நுழைவுக் கட்டணம் ரூ.50 ! பொதுமக்கள் மகிழ்ச்சி !

0
சென்னையில் முதன்முறையாக பிரமாண்ட மலர் கண்காட்சி - நுழைவுக் கட்டணம் ரூ.50 ! பொதுமக்கள் மகிழ்ச்சி !
சென்னையில் முதன்முறையாக பிரமாண்ட மலர் கண்காட்சி - நுழைவுக் கட்டணம் ரூ.50 ! பொதுமக்கள் மகிழ்ச்சி !
சென்னையில் முதன்முறையாக பிரமாண்ட மலர் கண்காட்சி – நுழைவுக் கட்டணம் ரூ.50 ! பொதுமக்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் திமுக கட்சியின் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று சென்னையில் பிரம்மாண்ட மலர் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கலைஞர் பிறந்தநாள்:

கருணாநிதி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் பிறந்தவர். இவர் தனது 14 வயதிலேயே பல்வேறு சமூக பணிகளிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு அரசியலில் நுழைந்தவர். ஒருபுறம் முழுநேர அரசியல்வாதியாக இருந்தாலும் தமிழ் திரையுலகிலும் கவனம் செலுத்தி பல்வேறு திரைப்படங்களில் வசனகர்த்தாவாக தனது திராவிட சிந்தனைகளை பரப்பினார். தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தவர். கலைஞர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக 2018ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

Exams Daily Mobile App Download

இவருக்கு பிறகு அவரது மகன் முக ஸ்டாலின் அவர்கள் கட்சி பொறுப்பை ஏற்று தலைமை தாங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார். முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி,ஜூன் 3ம் தேதியான இன்று கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. அதன்படி, இன்று சென்னையில் பிரம்மாண்ட மலர் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ.8,000/- ஊக்கத்தொகையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

இதில் ஊட்டி, கொடைக்கானல், மைசூர் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகை பூக்களை வைத்து மலர் அலங்காரங்கள், காய்கறியால் செதுக்கப்பட்ட உணவகங்கள், செல்பி எடுப்பதற்கான புதிய இடங்கள் மற்றும் கண்காட்சியில் மலர்களால் செய்யப்பட்ட மயில், குதிரை, சிங்கம் ,கரடி போன்ற சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனுப்பும் சிறந்த புகைப்படங்கள் மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கலைவாணர் அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடப்பது இதுவே முதல்முறை என்பது பெருமைக்குரியதாக குறிப்பிடத்தக்கது. மலர் கண்காட்சிக்கு கலைவாணர் அரங்கம் விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது. இந்த மலர் கண்காட்சி இன்று முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!