தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை!
தமிழகத்தில் வழக்கமாக 12ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும். அதை தொடர்ந்து 10 ஆம் வகுப்புக்கும் பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், மே இறுதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான கோடை விடுமுறை வரும் மே 14 ஆம் தேதி தொடங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்களின் கல்வி அதிகம் பாதிக்கப்பட்டது. தொற்று காரணமாக, கடந்தாண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அதே போல் 10 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், இம்முறை கொரோனா பரவல் குறைந்ததால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை தேர்வு தேதியும் வெளியிட்டது. 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் இருந்து விலகும் இயக்குனர் – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதே போல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கால அட்டவணை படி, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் மே 13 ஆம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக பள்ளி மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும், அதனால் அவர்கள் நலன் கருதி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தால் மட்டும் போதும். மேலும் மற்ற நாட்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதை அடுத்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் கோடை விடுமுறைக்குப் பின் புதிய கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.