விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் இருந்து விலகும் இயக்குனர் – ரசிகர்கள் அதிர்ச்சி!
காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து ஏற்கனவே சூர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷன் விலகினார். தற்போது இந்த சீரியலின் இயக்குனர் சீரியலை விட்டு விலகப்போவதாகவும், இவருக்கு பதிலாக பிரபல இயக்குனர் சீரியலை இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
காற்றுக்கென்ன வேலி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி தொடர் தற்போது தான் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் சூர்யா கதாபாத்திரத்தில் சுவாமிநாதனும், வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்காவும் நடித்து வருகிறார்கள். கல்லூரி வாழ்க்கையில் அனுபவிக்கும் காதல், சண்டை என அனைத்தையும் அப்படியே தத்ரூபமாக படம் போட்டு காட்டி கொண்டிருக்கிறது.
முழு ஊரடங்கு உத்தரவு (மே 8 ) நாளை வரை நீட்டிப்பு – மாநில அரசு திடீர் அறிவிப்பு!
அதாவது தான் கற்க வேண்டிய கல்விக்கு பல தடைகள் வந்தாலும் அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்துவிட்டு படித்தே தீர வேண்டும் என்கிற ஆசையில் ஆசிரியையின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். பின்பு, அதே கல்லூரியில் வேலை பார்த்து வரும் கல்லூரி பேராசிரியரான சூர்யாவை காதலிக்கிறார். தற்போது வெண்ணிலா சாரதா வீட்டில் தங்கி தான் கல்லூரிக்கு சென்று வருகிறார். சாரதாவிற்கு துணையாக சூர்யா வீட்டில் தான் இருக்கிறார். எனவே சூர்யா மற்றும் மூவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே சூர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷன் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மிதுன ராசி சீரியலில் நடித்து வந்த சுவாமிநாதன் அனந்தராமன் என்கிற நடிகர் நடித்து வருகிறார். தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குனர் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தாலாட்டு சீரியலின் முன்னாள் இயக்குனர் தான் இயக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.