தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை தகவல்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 1 முதல் 5ம் வகுப்புக்கு பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு:
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை நோய் பாதிப்பு குறைந்து வருவதால், மீண்டும் பள்ளிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றனர். இந்த நடப்பு ஆண்டாவது மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா? என கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.
TN MRB மருத்துவத் துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
இந்த அட்டவணை அடிப்படையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடைபெறும். அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இ ருப்பினும் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிரத்யேக தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மார்ச் 16 கடைசி நாள்!
மேலும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத் துறை மூலமாக மாநில, மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மே 13ம் தேதியுடன் நிறைவு பெறுவதால், அனைத்து கல்விசார் பணிகளும் முடிக்கப்பட்டு விடும். அதன்பிறகு, மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படும் மற்றும் விடுமுறை முடிந்து 2022-23 கல்வி ஆண்டுக்காக ஜூன் 13ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இதனை தொடர்ந்து பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.