TN MRB மருத்துவத் துறையில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு தெரிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடத்தை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஏராளமான இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவத்துறையில் உள்ள மருந்தாளுநர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அப்பா யார் என்பதை கண்டுபிடித்த லட்சுமி, உண்மையை சொன்ன சௌந்தர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!
இதில் சித்த, ஆயுர்வேத, யுனானி , ஹோமியோபதி உள்ளிட்ட பணியிடங்களில் உள்ள காலி இடங்களை நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க மருத்துவ துறை சார்ந்த பணி சம்பந்தப்பட்ட துறையில் படித்தவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்பணியில் நியமிக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது
அனைத்து ரேஷன்அட்டைதாரர்கள் கவனத்திற்கு – பொருட்கள் வாங்க புதிய விதிமுறைகள்!
இதையடுத்து மற்ற வகுப்பை சேர்ந்த பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதற்கு வருகிற மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் குறைவான அளவில் காலிப்பணியிடங்கள் இருப்பதால் விண்ணப்பத்தார்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் https://mrb.tn.gov.in/ அல்லது https://www.mrb.tn.gov.in/notifications.html என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.