அப்பா யார் என்பதை கண்டுபிடித்த லட்சுமி, உண்மையை சொன்ன சௌந்தர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
அப்பா யார் என்பதை கண்டுபிடித்த லட்சுமி, உண்மையை சொன்ன சௌந்தர்யா - சீரியலில் அடுத்த திருப்பம்!
அப்பா யார் என்பதை கண்டுபிடித்த லட்சுமி, உண்மையை சொன்ன சௌந்தர்யா - சீரியலில் அடுத்த திருப்பம்!
அப்பா யார் என்பதை கண்டுபிடித்த லட்சுமி, உண்மையை சொன்ன சௌந்தர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!

கண்ணம்மாவுடன் பாரதி இருக்கும் புகைப்படத்தை லட்சுமி பார்த்துவிடுவாரா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த சமயத்தில் அனைத்து உண்மைகளையும் லட்சுமியிடம் சௌந்தர்யா கூறிவிடுவது போல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. தனது அப்பா யாராக இருக்கும் என லட்சுமி நாளுக்கு நாள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். எப்படியாவது தனது அப்பாவை கண்டுபிடித்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் லட்சுமி இறங்கியுள்ளார். இதனால் வீட்டில் அப்பாவின் புகைப்படம் எங்காவது இருக்கிறதா என அவ்வப்போது தேடி கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க ஹேமாவும் தனது அப்பாவிற்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க வேண்டும் என சௌந்தர்யாவிடம் கூறுகிறார்.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மார்ச் 16 கடைசி நாள்!

வெண்பா, பாரதியை எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் சாந்தியிடம் ஐடியா கேட்கிறார். அதற்கு சாந்தி, ஹேமாவின் மனதில் இடம்பிடித்துவிட்டால் போதும். பாரதியை திருமணம் செய்வது எளிதாகிவிடும் என கூறுகிறார். இந்த பிளான் கண்டிப்பாக சரியாக இருக்கும் என வெண்பாவும் ஹேமாவின் மனதில் இடம்பிடிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்.முதல் நாளே பிரியாணியை வாங்கி கொண்டு ஹேமா படிக்கும் பள்ளிக்கு வெண்பா செல்வார். எப்போதும் கண்ணம்மாவின் சாப்பாட்டையே சாப்பிட்டு கொண்டிருந்த ஹேமா, பிரியாணியை பார்த்ததும் வெண்பா பக்கம் திரும்பிவிட்டார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை!

இதனால் கண்ணம்மாவும் சற்று கடுப்பாகியுள்ளார். எப்போது தான் அனைத்து உண்மைகளும் தெரிந்து பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேருவார்கள் என மக்கள் எதிர்பார்த்த சமயத்தில் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது தனது அப்பா யார் என்பது குறித்தான அனைத்து உண்மைகளையும் சௌந்தர்யா மூலமாக லட்சுமி தெரிந்துகொள்வது போலவும், ஹேமா குறித்தான உண்மையை லட்சுமி தெரிந்துகொள்வது போலவும் செய்திகள் பரவி வருகிறது. உண்மையில் லட்சுமி அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்ள போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!