12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள்!
கோவாவில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. மேலும் இந்த வார இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள்:
கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் நடத்தப்பட்டு வந்தது. கோவாவில் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு தவணையாக பொதுத்தேர்வு நடைபெறும். முதல் தவணை பொதுத்தேர்விற்கு 50% பாடத்திட்டங்களுடன் டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. இரண்டாவது தவணை பொதுத்தேர்வில் மீதமுள்ள 50% பாடத்திட்டங்களுடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
கோவா முழுவதும் உள்ள 106 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 18,215 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பொதுத்தேர்வில் 8,937 ஆண்களும், 9,278 பெண்களும் எழுதினர். அதாவது 12 ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் 5,502 மாணவர்களும், அறிவியல் பிரிவில் 5,080 மாணவர்களும், கலைப் பிரிவில் 4,757 மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் 2,876 மாணவர்களும் தேர்வு எழுதியுள்ளனர்.
ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை கோடை விடுமுறை – மாநில கல்வித்துறை அறிவிப்பு!
இந்நிலையில் கோவாவில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவு இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சரியாக எந்த தேதியில் வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் தவணைக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அந்த மதிப்பெண்ணுடன் பருவத் தேர்வுகள், திட்ட பணிகள், பணிகள் மற்றும் உள் மதிப்பெண்கள் ஆகியவையும் சேர்க்கப்படும்.