ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை கோடை விடுமுறை – மாநில கல்வித்துறை அறிவிப்பு!
இந்தியாவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது பஞ்சாப் மாநில அரசு இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
கோடை விடுமுறை:
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தன் வசப்படுத்திக் கொண்டு ஒரு புரட்டு புரட்டி விட்டது. அனைத்தும் தலைகீழாக மாறி பல தடைகள் அமலுக்கு வந்தது. அதில் ஒன்றாக கல்வியும் பாதிக்கப்பட்டதால் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வாயிலாக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த 2022 ஆம் ஆண்டு எல்லா தடைகளும் நீக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.
தமிழத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
நேரடி வகுப்புகளும் நடைபெற்று தற்போது 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் நடைபெறுகிறது. மேலும் கோடை விடுமுறை காலம் குறித்து ஒவ்வொரு மாநில கல்வி அமைச்சர்கள் தகவல்கள் வெளியிட்ட நிலையிலும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மாற்று கருத்துக்களாக கோரிக்கைகள் வைத்து கொண்டே வந்தனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் முன்னதாக கூறியபடியே அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மே 14 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மே 14 முதல் விடுப்பு காலம் என சொல்லப்பட்டதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது மே 15 முதல் மே 31 வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி அளவு வகுப்புகளும், நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்ளுக்கு காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும் ஆஃப்லைன் முறையில் வகுப்புகள் செயல்படும் என பஞ்சாப் மாநில கல்வித்துறை அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் மாற்றியமைத்துள்ளார். மேலும் கோடை கால விடுமுறையாக ஜூன் 1ந் தேதி முதல் ஜூன் 30 வரை அளிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.